உள்ளூர் செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

Published On 2023-01-10 07:41 GMT   |   Update On 2023-01-10 07:41 GMT
  • குழந்தைகள் நல அலுவலர் பூர்ணம் புகார்
  • சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கரூர்:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜா (வயது 22). இவர், நாகம்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 6-ந் தேதி, சாலப்பாளையம் பட்டாளம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து, அரவக்குறிச்சி குழந்தைகள் நல அலுவலர் பூர்ணம் கொடுத்த புகாரின்பேரில், கரூர் புறநகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News