உள்ளூர் செய்திகள்
வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது
- வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டது
கரூர்:
கரூரில் வாலிபரை கத்தியால், குத்தியதாக இருவரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார், சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 27) கட்டட தொழிலாளி. இவர் தனது சக தொழிலாளிகளான கிருபாகரன் (32), விஜயகுமார், (22)ஆகியோருடன், கரூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த கிருபாகரன், விஜயகுமார் ஆகியோர், சூர்யாவை கத்தியால் குத்தினர். இதில், கழுத்தில் காயமடைந்த சூர்யா, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், கிருபாகரன், விஜயகுமார் ஆகிய இரு வரையும் கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.