தக்கலை அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை தாக்கிய வியாபாரி
- சேக்முகமது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயகுமாரியை சரமாரியாக குத்தியுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி :
தக்கலை அருகே உள்ள காப்புவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமாரி (வயது45). கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், மணலியில் சாலையோரம் ஒட்டல் நடத்தி வருகிறார்.
இவருக்கும் இரவிபுதூர் கடை பகுதியை சேர்ந்த சேக்முகமது (55) என்பவருக்கும் சுமார் 6 மாதமாக பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்நேற்று காலை விஜயகுமாரியிடம் மது குடிக்க சேக்முகமது பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சேக்முகமது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயகுமாரியை சரமாரியாக குத்தியுள்ளார்.
படுகாயம் அடைந்த விஜயகுமாரியை அருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது சம்பந்தமாக தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.