உள்ளூர் செய்திகள்
- கவாஸ்கர் அவரது நண்பர் கண்ணனுடன் சென்று மைக்கேல்ராஜை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
- வடசேரி போலீசார் கவாஸ்கர், கண்ணன் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நாகர்கோவில் :
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த திருநங்கையிடம் அருகுவிைளயைச் சேர்ந்த கவாஸ்கர் என்பவர் தகராறு செய்துள்ளார். இதை கிருஷ்ணன்கோவில் மேல தெருகரையைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (வயது 19). தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் கவாஸ்கர் அவரது நண்பர் கண்ணனுடன் சென்று மைக்கேல்ராஜை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் கத்தியாலும் அவரை குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த மைக்கேல் ராஜ் ஆசாரிப்பள் ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வடசேரி போலீசார் கவாஸ்கர், கண்ணன் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.