உள்ளூர் செய்திகள்

புதுக்குடியிருப்பு சிவசுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா

Published On 2022-06-26 07:36 GMT   |   Update On 2022-06-26 07:36 GMT
  • முதல் நாள் சிவசுடலை மாடசுவாமிக்கு அலங்கார தீபாராதனை.
  • சனிக்கிழமை அன்னதானம் நடக்கிறது.

நாகர்கோவில்:

ஈத்தாமொழி அருகே உள்ள புதுக்குடியிருப்பு சிவசுடலை மாடசாமி கோவில் கொடை விழா ஜூலை 1-ந் தேதி தொடங்கி இரண்டு நாள் நடக்கிறது.

முதல் நாள் காலை மங்கள இசை, கணபதி ஹோமம், திருவாசகம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8.30க்கு நாதஸ்வரம், தொடர்ந்து வில்லிசை, பெருமாள் சுவாமி, பிரம்மசக்தி, சிவசுடலை மாடசுவாமிக்கு அலங்கார தீபாராதனை.

சனிக்கிழமை காலை பக்திகானம், நாதஸ்வரம், வில்லிசை 1 மணிக்கு நாகர், சிவசுடலைமாடசுவாமி ஓண்டன் சுவாமிக்கு மாசனம் சுவாமிக்கு தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.

Tags:    

Similar News