உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரிக்கு நாளை கோவா கவர்னர் வருகை

Published On 2022-09-10 09:28 GMT   |   Update On 2022-09-10 09:28 GMT
  • கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
  • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார்.

கன்னியாகுமரி:

கோவா மாநில கவர்னர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை நாளை (11-ந்தேதி) மதியம் 1 மணிக்கு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அவர் பிற்பகல் 2 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். மாலை 4.30 மணிக்கு விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தர்கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தா சபாக்கிரகத்தில் நடக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 52- வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றியதை நினைவு கூறும் விழா ஆகிய விழாக்களில் பங்கேற்கிறார்.

இந்த தகவலை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்தார். கோவா கவர்னர் கன்னியாகுமரி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News