உள்ளூர் செய்திகள்
26-ந்தேதி நடைபெற உள்ள லோக் அதாலத் குறித்து நீதிபதிகள் ஆலோசனை
- விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள வழக்குகள் குறித்த ஆலோசனை கூட்டம்.
- விபத்து வழக்குகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிகளவிலான வழக்குகளுக்கு தீர்வுகாணும் வகையில் அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் :
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வருகிற 26-ந்தேதி லோ அதாலத் என்னும்மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் விசாரணைக்குஎடுத்து கொள்ளப்படவுள்ள வழக்குகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட நீதிபதிசொர்ணம் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.விபத்து வழக்குகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிகளவிலான வழக்குகளுக்கு தீர்வுகாணும் வகையில் அறிவுறுத்தப்பட்டது. இதில்குற்றவியல் நடுவர் புகழேந்தி, மோட்டார் வாகன விபத்து சிறப்பு நீதிபதி ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இன்சூரன்ஸ் நிறுவன அலுவலர்கள், வக்கீல்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.