உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை அபேஸ்

Published On 2022-07-19 10:21 GMT   |   Update On 2022-07-19 10:21 GMT
  • ஆர்.ஆர்.நகரில் பஸ் சென்றபோது தான் வைத்திருந்த பேக்கை திறந்து பார்த்த அவர் அதில் இருந்த 11 பவுன் நகை மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
  • கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் நகையை அபேஸ் செய்து தப்பியது தெரியவந்தது.

தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த சித்திர க்குடி மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்.

இவரது மனைவி சந்திரா (வயது 75). சம்பவத்தன்று இவர் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

ஆர்.ஆர்.நகரில் பஸ் சென்றபோது தான் வைத்திருந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 11 பவுன் தங்க நகை மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். பஸ்சில் இருந்தவர்களிடம் கேட்டு பார்த்தும் நகை பற்றிய விவரம் தெரியவில்லை. அப்போது தான் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் நகையை அபேஸ் செய்து தப்பியது தெரியவந்தது.இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News