உள்ளூர் செய்திகள்

காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாடு நடந்தது.

காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாடு

Published On 2022-07-16 10:33 GMT   |   Update On 2022-07-16 10:33 GMT
  • மாநாட்டில் செயற்குழு அறிக்கை, வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது.
  • இரண்டாவது நாளாக நடைபெற உள்ள மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

தஞ்சாவூர்:

காப்பீட்டு கழக ஊழியர் சங்க வைர விழா ஆண்டு மாநாடு தஞ்சையில் இன்று தொடங்கியது. இதற்கு தஞ்சை கோட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சேதுராமன் வரவேற்றார். ஏ.ஐ.ஐ.இ.யூ. பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா தொடக்க உரையாற்றினார். முன்னதாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த மாநாட்டில் செயற்குழு அறிக்கை, வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது. அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மாநாடு நடைபெற்று வருகிறது. நாளை இரண்டாவது நாளாக மாநாடு நடைபெற உள்ளது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் இணை செயலாளர் கிரிஜா, முதுநிலை கோட்ட மேலாளர் சுஜீத், எல்.ஐ.சி. முதல் நிலை அதிகாரிகள் சங்க தலைவர் சோழ சுந்தர பாண்டியன், காப்பீட்டு கழக ஊழியர் சங்க பொருளாளர் ரவிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News