உள்ளூர் செய்திகள்

புதிய ஊராட்சி அலுவலக கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

மானாங்கோரையில், புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு

Published On 2023-05-05 10:02 GMT   |   Update On 2023-05-05 10:02 GMT
  • ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
  • முடிவில் ஊராட்சி செயலர் சரண்ராஜ் நன்றி கூறினார்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரை ஊராட்சியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.

அரசு தலைமை கொறடா கோவி.செழியன், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினைரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மணிரெத்தினம் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ஒன்றிய பெருந்தலைவர் வைஜெயந்தி மாலா உட்பட கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஊராட்சி செயலர் சரண்ராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News