search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Office"

    • 2013 ஆம் ஆண்டு விஜய் டி.வியில் ஒளிப்பரப்பான ஆஃபிஸ் தொடரில் அறிமுகமானார் விஷ்ணு.
    • பிக் பாஸ் சீசன் 7- நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    2013 ஆம் ஆண்டு விஜய் டி.வியில் ஒளிப்பரப்பான ஆஃபிஸ் தொடரில் அறிமுகமானார் விஷ்ணு. Zee தமிழின் சத்யா தொடரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.

    2017 ஆம் ஆண்டு 'இவன் யார் என்று தெரிகிறதா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதநாயகனாக அறிமுகமானார். பின்னர், பிக் பாஸ் சீசன் 7- நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு 4-வது ரன்னரப்பாக வந்தார்.

    இந்நிலையில் அடுத்ததாக படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு ராகுல் ரவீந்தரன் இயக்கத்தில் வெளிவந்த சி லா சோவ் என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    சி லா சோவ் திரைப்படம் தெலுங்கு மொழியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காலையில் இருந்து மாலை வரை அங்கு தொண்டர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
    • சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து செல்வப் பெருந்தகையை சந்தித்து செல்கின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சி அலுவலகங்களும் பரபரப்பாக காணப்படுகின்றன.

    கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு போன்ற காரணங்களுக்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தினமும் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். சத்தியமூர்த்தி பவன் பரபரப்பாகி உள்ளது. காலையில் இருந்து மாலை வரை அங்கு தொண்டர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவராக கு.செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்ட பிறகு கட்சி நிர்வாகிகள் வருகை அதிகரித்தன. முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளன.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து செல்வப் பெருந்தகையை சந்தித்து செல்கின்றனர்.

    தலித் சமூகத்தை சேர்ந்தவர் தமிழக தலைவராக இருப்பதோடு மட்டுமின்றி அனைவரையும் அரவணைத்து செல்லும் மனப்பக்குவத்தில் அவர் செயல்படுவதால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் சத்திய மூர்த்தி பவனுக்கு வருகின்றனர்.

    மேலும் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை அடிக்கடி சந்தித்து வருவதால் பத்திரிக்கையாளர் கூட்டமும் தினமும் அங்கு காணப்படுகிறது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் வருகை அதிகரிப்பால் காங்கிரஸ் கட்சி அலுவலகம் களை கட்டியுள்ளது.

    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்து விடும்.
    • அலுவலகங்களுக்கு இப்போது பொது மக்கள் மட்டுமின்றி கட்சி நிர்வாகிகளும் வந்து செல்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு தேர்தல் தேதி அநேகமாக வருகிற சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்து விடும்.

    அதன் பிறகு முதலமைச்சர் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை கட்சிப் பணிக்கு செல்லும் போது அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. சொந்த கார் அல்லது தனியார் வாகனங்களை பயன்படுத்தி கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும்.

    அதுமட்டுமின்றி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி தோறும் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு இப்போது பொது மக்கள் மட்டுமின்றி கட்சி நிர்வாகிகளும் வந்து செல்கின்றனர். அரசியல் ஆலோசனை கூட்டங்களும் இங்கு நடைபெறுவது வழக்கம்.

    ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அங்கு கட்சி நிர்வாகிகள் வரக் கூடாது என்பதற்காக அரசு சார்பில் உள்ள எம்.எல்.ஏ.க் கள், எம்.பி.க்கள் அலுவலகங்களை பூட்ட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

    மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உத்தர விடுவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் இப்போதே தங்களது அலுவலகத்தில் உள்ள சொந்த பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    • மதுரையில் எஸ்.பி.ஐ. கட்சி சார்பில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டு அலுவலக திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரையில் எஸ்.டிபி.ஐ. கட்சி சார்பில் ஜன.7-ந் தேதி மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது, இதை முன்னிட்டு கோரிப்பா ளையம் பகுதியில் மாநாட்டு அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மாநில செயலாளர் அபு பக்கர் சித்திக் தலைமை தாங்கி னார்.

    மாநில பொதுச் செயலா ளர் நஸ்ரூதீன், செயலாளர் நஜ்மா பேகம், செயற்குழு உறுப்பினர்ஷபீக் அகமது, மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற் குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான் வரவேற்றார், உமன்ஸ் இந்தியா மூவ் மெண்்ட் மாநில தலைவர் ஃபாத்திமா கனி வாழ்த்தி பேசினார்.

    மாநாட்டு அலுவலகத்தை மாநில பொதுச் செயலாளர், மாநாட்டு குழு தலைவர் நிஜாம் முகைதீன், மாநில பொதுச் செயலாளர் அகமது நவ்வி ஆகியோர் திறந்து வைத்தனர்.

    முடிவில் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் நன்றி கூறினார்.

    இதில் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 7 வணிக வரி கோட்ட அலுவலகங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    • அவிநாசி அருகே கைகாட்டிப்புதுாரில் உள்ள ஏ.இ.பி.சி., வளாகத்தில், புதிய வணிக வரி கோட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    திருப்பூர்,ஜூலை.23-

    தமிழகம் முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 7 வணிக வரி கோட்ட அலுவலகங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    திருப்பூரில், அவிநாசி அருகே கைகாட்டிப்புதுாரில் உள்ள ஏ.இ.பி.சி., வளாகத்தில், புதிய வணிக வரி கோட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. வணிக வரித்துறை இணை கமிஷனர் (பொறுப்பு) லட்சுமி பவ்யா தனிரு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அமலாக்க பிரிவு இணை கமிஷனர் (பொறுப்பு) ரமாதேவி, வணிக வரித்துறை துணை கமிஷனர் முருககுமார், வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் உள்பட நிர்வாகிகள், ஆடிட்டர்கள் பங்கேற்றனர்.

    3 வணிக வரி மாவட்டங்களை உள்ளடக்கி, திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வணிக வரி மாவட்டம் 1ல், அனுப்பர்பாளையம், அவிநாசி, காந்திநகர், பொங்கலூர், திருப்பூர் வடக்கு - 1, திருப்பூர் வடக்கு - 2, திருப்பூர் ரூரல் - 1, திருப்பூர் ரூரல் 2 சரகங்கள் உள்ளன.

    வணிக வரி மாவட்டம் 2 ல், திருப்பூர் தெற்கு, திருப்பூர் பஜார், திருப்பூர் சென்ட்ரல் - 1, சென்ட்ரல் 2, கொங்குநகர், லட்சுமி நகர்.வேறு மாவட்டத்திலிருந்த திருப்பூர் வருவாய் மாவட்ட பகுதிகள் சேர்க்கப்பட்டு, புதிதாக திருப்பூர் வணிக வரி மாவட்டம் - 3 உருவாக்கப்பட்டுள்ளது. வணிக வரி மாவட்டம் 3 ல், தாராபுரம், காங்கயம், பல்லடம் - 1, பல்லடம் - 2, வெள்ளகோவில், உடுமலை வடக்கு, உடுமலை தெற்கு பகுதிகள் இடம் பெற்றுள்ளன.

    திருப்பூர் வணிக வரி கோட்டத்தை முழு செயல்பாட்டுக்கு கொண்டு வர விரைவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வணிக வரி கோட்டம் உதயமாகியுள்ளதால் திருப்பூர் மாவட்ட வர்த்தகர்கள், வரி பயிற்சியாளர், ஆடிட்டர்கள், ஈரோடு, கோவை என வெவ்வேறு மாவட்டங்களுக்கு செல்லவேண்டிய நிலை இனி ஏற்படாது.

    • வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
    • ஆண்களைப்போல் பெண்களும் இரவு ஷிப்ட்டில் பணியாற்றுகிறார்கள்.

    வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் திருமணத்திற்கு முன்பு குடும்பப் பொறுப்புகளை சுமக்கவேண்டியதில்லை. அலுவலகப் பணிகளை பார்த்தால் போதுமானது. ஆனால் திருமணமாகிவிட்டால், குடும்ப நிர்வாகத்தையும் அவர்கள் சேர்த்து சுமக்க வேண்டியதிருக்கிறது. இந்த இரண்டு பணிகளையும் சேர்த்து கவனிக்கும் பெண்கள் உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அல்லது வருத்தத்தோடு இரண்டு பணிகளையும் செய்துகொண்டிருக்கிறார்களா? என்பதை எல்லாம் அலசும் வித்தியாசமான சர்வே இது!

    * குடும்ப நிர்வாகம், அலுவலகப் பணி இரண்டையும் கவனிப்பது உங்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு..?

    - 51.8 சதவீத பெண்கள் 'மகிழ்ச்சியடைந்து கொள்வதைவிட வேறு வழியில்லை' என்று சற்று சலிப்பு கலந்த நிலையில் பதில் கூறியிருக்கிறார்கள்.

    - மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற பதில், 37.5 சதவீத பெண்களிடமிருந்து கிடைத்திருக்கிறது.

    - கொஞ்சம்கூட மகிழ்ச்சியில்லை என்று 10.7 சதவீதம் பேர் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.

    * நீங்கள் குடும்ப நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே சென்று வேலையும் செய்ய என்ன காரணம் என்ற கேள்விக்கு..?

    - ஊதியத்திற்காக என்று 55 சதவீதம் பேரும், வேலை தரும் ஆத்ம திருப்திக்காக என்று 40 சதவீதம் பேரும் கூறியுள்ளார்கள்.

    - மீதமுள்ள பெண்கள் 'சமூகத்திலும், உறவினர்கள் மத்தியிலும் கிடைக்கும் கவுரவத்திற்காகவும்- வீட்டிலே இருந்தால் போரடித்துப்போவதை தவிர்க்கவும்' வேலைக்குப் போவதாக சொல்கிறார்கள்.

    தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இந்த சர்வேயில் கருத்து தெரிவித்திருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் 26 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் கணிசமான அளவினர், குடும்பம் மற்றும் வேலையால் அதிக மனஅழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இரவில் தூங்கச் செல்லும்போது மறுநாள் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பது, காலை உணவு என்ன தயாரிப்பது, கியாசை அணைத்தோமா, வீட்டை பூட்டினோமா.. என்றெல்லாம் நூறு கேள்விகள் மூளையை மொய்த்துக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவதாகவும், திடுக்கிட்டு விழிக்கும்போது விடிந்துவிடுவதாகவும் அலுப்போடு சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளையும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி தொடங்கி, ஒரே மாதிரி முடிப்பது எரிச்சலை தருவதாகவும் சொல்கிறார்கள்.

    * வீட்டு நிர்வாகத்தைவிட அலுவலகப் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா என்ற கேள்விக்கு..?

    - 60.7 சதவீத பெண்கள், இரண்டையும் சமமாக பாவிப்பதாக சொல்கிறார்கள்.

    - அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும்போது வீட்டை மறந்துவிடுவதாக 25 சதவீதம் பேர் பதிலளித்திருக் கிறார்கள்.

    - 13 சதவீத பெண்கள், 'வீட்டில் இருந்து தேவையான அன்பு கிடைக்காதபோது, அலுவலக வேலையில் மூழ்கிவிடுவதாக' சொல்கிறார்கள்.

    - மீதமுள்ளவர்கள் 'கணவரோடு சண்டையிட்டால் கவனம் முழுவதும் வேலையில் திரும்பி விடும்' என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

    * அலுவலகத்தில் வேலை முடிந்து வீடு திரும்ப தாமதமானால், வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு..?

    - அமைதியாக வரவேற்று, அடுத்து செய்யவேண்டிய வீட்டு வேலைகள் அனைத்திலும் உதவுவார்கள் என்று 54.6 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.

    - அரைகுறை மனதோடு வீட்டு வேலைகளில் உதவுவார்கள் என்று 30 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக் கிறார்கள்.

    - பத்து சதவீதம் பேர், வீட்டில் எடக்கு மடக்காக கேள்வி கேட்பார்கள் என்று தங்கள் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

    - மீதமுள்ளவர்கள், 'அன்று முழுவதும் வீட்டில் உள்ளவர்கள் இறுக்கமாக காணப்படுவார்கள்' என்று கூறியிருக் கிறார்கள்.

    * உங்கள் வேலைச் சுமையை உணர்ந்து, கணவர் உங்களுக்கு உதவுவாரா என்ற கேள்விக்கு..?

    - வேலைச் சுமையை உணர்ந்துகொள்வார். ஆனால் எப்போதாவதுதான் உதவுவார் என்பது 39.3 சதவீத பெண் களின் கருத்து.

    - தாமாகவே முன்வந்து உதவுவார் என்று கூறி, 32.1 சதவீத பெண்கள் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.

    - 20 சதவீதத்தினர், 'உதவி செய்வது என்பது அவரது அப்போதைய மனநிலையை பொறுத்தது' என்று கூறியிருக்கிறார்கள்.

    - மீதமுள்ளவர்கள் என்ன கூறியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். 'திரும்பிக்கூட பார்ப்பதில்லை' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    பொதுவாக வேலைக்கு செல்லும் மனைவிக்கு வீட்டு வேலைகளில் தன்னால் முடிந்த அளவுக்கு உதவவேண்டும் என்றுதான் கணவர் விரும்புகிறார். 'இன்று வீட்டு வேலைகளை நீ செய். குழந்தைகளை நான் கவனித்துக்கொள் கிறேன்' என்று மனைவியிடம் சொல்லவும் செய்வார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்காது. கடைசியில் எல்லா வேலைகளும் சேர்ந்து வழக்கம்போல் மனைவி தலையில்தான் விழும். அதனால் இந்த விஷயத்தில் கணவர் கொடுக்கும் வாக்குறுதி காற்றில் பறந்துவிடுவதால், மனைவிமார்கள் பெரும்பாலும் அவர்களை நம்புவதில்லை.

    அதே நேரத்தில் 'வேலை முடிந்து வீடு திரும்புவதில் தாமதம் ஏற்படுதல்' என்ற சிந்தாந்தம் மறைந்துகொண்டிருக்கிறது. ஏன்என்றால் முன்பெல்லாம் பெண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரைதான் என்ற நிலை இருந்தது. அதனால் அவர்கள் வேலைமுடிந்து, அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பும் வாய்ப்பு இருந்தது. இன்றைய நிலை அதுவல்ல. ஆண்களைப்போல் பெண்களும் இரவு ஷிப்ட்டில் பணியாற்றுகிறார்கள். நள்ளிரவிலோ, அதிகாலையிலோ வீடு திரும்புகிறார்கள். அதனால் இரவு, நள்ளிரவு, தாமதம் என்பன போன்றவை எல்லாம், வேலைக்குப் போகும் பெண்களிடமிருந்து வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன.

    * பஸ், ரெயிலில் பயணம் செய்து வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகள் என்னென்ன என்ற கேள்விக்கு..?

    - 61 சதவீதம் பேர், சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு செல்ல முடிவதில்லை என்றும், அதுபோல் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு திரும்ப முடியவில்லை என்றும் கூறியிருக் கிறார்கள்.

    - 27 சதவீதம் பேர், பயணத்திலே அதிக நேரத்தை செலவிடுவதால் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதாக சொல்கிறார்கள்.

    - 12 சதவீத பெண்கள் பாலியல்ரீதியான தொந்தரவுகள் பயணத்தில் உருவாகுவதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    • நிதி நிலைமைக்கேற்ப பட்ஜெட்டை மாற்றி அமைக்க வேண்டும்.
    • பெண்கள் தொழிலில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க எளிய வழிகள்..

    பெண்களுக்கு குடும்பத்திலும் தொழிலிலும் எதிர்பாராத விதமாக நிதி நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதனை சமாளிப்பதற்காக சில முன்னேற்பாடுகளை செய்து வைத்திருப்பது நன்மை தரும். பெண்கள் தொழிலில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க எளிய வழிகள்..

    நிதி திட்டமிடல்

    எந்த செயலில் இறங்குவதாக இருந்தாலும் அதற்கான நிதி திட்டமிடல் என்பது முக்கியமானது. எப்போதும் பட்ஜெட்டை விட சிறிது கூடுதலாகவே நிதியை இணைத்து திட்டமிட வேண்டும். தொலை நோக்கு சிந்தனையுடன் திட்டமிடும் போது எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் மற்றவர் உதவியின்றி தீர்வு காண முடியும். இதுவே தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கான அடிப்படை தகுதியாகும்.

    அவசரகால நிதி

    தொழிலை பொறுத்தவரை அவசர கால நிதியை தனியாக வைத்திருக்க வேண்டும். மருத்துவச்செலவு, உபகரணங்கள் சேதமடைதல் எதிர்பாராத விபத்து, தொழில் இழப்பு என எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் வகையில் இந்த நிதி உதவும். இந்த நிதியை எதிர்பாராமல் ஏற்படும் செலவுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவசர கால நிதிக்கென வங்கியில் தனி கணக்கு தொடங்கி சேமித்து வைக்கலாம். அதன் மூலம் வட்டித்தொகையும் கூடுதலாக கிடைப்பதால் நிதி நெருக்கடி ஏற்படும் போது எளிதாக சமாளிக்க முடியும்.

    கடனை திருப்பி செலுத்துதல்

    யாராக இருந்தாலும் புதிதாக தொடங்கும் தொழிலுக்கு அடிப்படையாக கடன் பெறுவது இயல்பானது. இந்த கடனை குறிப்பிட்ட கால இடைவெளியில் திருப்பி செலுத்துதல் அவசியமானது. கடனைக்கண்டு கொள்ளாமல் விடும்போது மொத்தமாக செலுத்தும் நெருக்கடி ஏற்படலாம். இதனால் நிதி சுமையை சமாளிக்க முடியாமல் தவிப்புகுள்ளாகலாம். எனவே முடிந்தவரை கடனை அவ்வப்போது திருப்பி செலுத்த வேண்டும். கடனை சரியாக செலுத்துவதன் மூலம் கடனுக்கான தரவரிசை அங்கீகாரத்தைபெற முடியும்.

    முதலீடுகள் அவசியம்..

    எதிர்பாராமல் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு சிறந்த வழி முதலீடு செய்வதாகும். தொழில் தொடங்கும் போதே முதலீடு செய்வதில் ஈடுபட வேண்டும். நிதி நெருக்கடி என்பது கண் இமைக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது. கடன் பெறுவது மட்டுமின்றி சேமிப்பு, முதலீடு ஆகியவற்றாலும் அதனை சமாளிக்க முடியும்.

    பிரச்சனையின் தீவிரத்தை உணருதல்

    நெருக்கடியை சமாளிப்பதற்கு முன்பு பிரச்சனையின் தீவிரத்தை உணர வேண்டும். அதை தீர்ப்பதற்கான வழிகளை தகுந்த ஆலோசகரிடம் கேட்டு சரியான வழிமுறைகளை முதலில் பின்பற்ற வேண்டும். இரண்டாவதாக நிதி நிலைமைக்கேற்ப பட்ஜெட்டை மாற்றி அமைக்க வேண்டும். அடுத்து திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏற்றவாறு தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் தொழிலை பிரச்சனையிலிருந்து மீட்டெடுப்பதுடன் நிதி நெருக்கடியை சமாளிக்கவும் முடியும்.

    சந்தைப்படுத்தும் உத்தி

    நிதி நெருக்கடியிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தாமல் அடுத்த நிலைக்கு செல்ல தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தற்போது நடைமுறையில் இருக்கும் செயல்பாட்டில் மாற்றம் கொண்டு வருவதுடன் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான உத்தியையும் மாற்றி அமைக்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளரை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

    • சேலம் சித்தர் கோவில் மெயின் ரோடு அம்மன் நகர் பகுதியில் சிவதாபுரம் மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது.
    • எனவே இனி சிவதாபுரம், நெத்திமேடு மின்சார வாரிய அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு மேற்கண்ட சொந்த கட்டிடத்தில் செயல்படும்.

    சேலம்:

    சேலம் சித்தர் கோவில் மெயின் ரோடு அம்மன் நகர் பகுதியில் சிவதாபுரம் மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. அதேபோன்று புத்தூர் இட்டேரி ரோடு, கொடம்பைகாடு பகுதியில் நெத்திமேடு புறநகர் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த 2 அலுவலகமும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தன.

    இந்த நிலையில் கந்தம்பட்டி சித்தர் கோவில் மெயின்ரோடு, கிருஷ்ணப்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் எதிரில் புதிதாக சொந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. எனவே இனி சிவதாபுரம், நெத்திமேடு மின்சார வாரிய அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு மேற்கண்ட சொந்த கட்டிடத்தில் செயல்படும். இந்த தகவலை சேலம் மேற்கு கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்து உள்ளார்.

    • வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் நீண்ட வருடங்களாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
    • தற்போது, பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத் திற்கு சொந்த கட்டிடம் கட்டு வதற்காக அரசிடம் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தியில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் நீண்ட வருடங்களாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    புதிய வாகன பதிவு மற்றும் தரச் சான்றிதழ் பெற வரும் கனரக வாகனங்களை பரமத்தியில் இருந்து வேலூர் செல்லும் பிரதான சாலையில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்வதால் போக்குவரத்து பாதிப்பும் விபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இங்கே தினசரி வாகன ஓட்டுனர் உரிமம் பெற மற்றும் பழகுனர் உரிமை பெற வருகின்றனர். தற்போது, பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத் திற்கு சொந்த கட்டிடம் கட்டு வதற்காக அரசிடம் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது.

    பரமத்தியில் பெரும் பாலான அரசு அலுவலகங்கள் பரமத்தி மெயின் சாலையிலேயே உள்ளதால், இப்பகுதியில் போக்கு வரத்து நெரிசலும் வாகன விபத்தும் ஏற்படுகிறது. இந்த அரசு அலுவலகங்க ளுக்கு வேலை நாட்களில் தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் வந்து செல்கின்றனர்.

    மேலும் திருச்செங்கோடு செல்லும் பிரதான சாலை மற்றும் கபிலர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையாக பரமத்தி உள்ளதால் மக்கள் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.

    இதனால் சேலம், கரூர் செல்லும் தனியார் பஸ்கள், பரமத்தி நகருக்குள் நுழைவதை தவிர்த்து பைபாஸ் சாலையிலே சென்று விடுகின்றன.

    தற்போது வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்திற்கு இடம் தேர்வு செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும் போக்குவரத்து மிகுந்த பரமத்திக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் புதிய கட்டடம் கட்டினால், மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    அதனால் மக்களின் நலன் கருதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பரமத்தி வேலூரில் அமைய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பரமத்தி வேலூர் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் முருகனிடம் கேட்டபோது, தற்போதுள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு வாகன ஆய்வு மேற்கொள் வதற்கு என தனி இடம் ஒதுக்கப்படாமல் உள்ளதால் சாலை ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது.

    சொந்த கட்டிடம் கட்டுவதற்கான ஒப்புதல் பெறப் பட்டுள்ள நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு, அப்பகுதியில் ஆய்வுக்கான தனி இடம் அமைக்கப்படும். அதுவரை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள் ளப்படும் என கூறினார்.

    • ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்ப கவுண்டர். இவர் இறந்து விட்டார்.
    • இவருக்கு பட்ட ணம் கலரம்பள்ளியில் உள்ள 2 ஏக்கர் 20 செண்ட் நிலத்தை 1996-ல் ஆதி திராவிடர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கு வதற்காக அரசு கையகப் படுத்தியது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்ப கவுண்டர். இவர் இறந்து விட்டார். இவருக்கு பட்ட ணம் கலரம்பள்ளியில் உள்ள 2 ஏக்கர் 20 செண்ட் நிலத்தை 1996-ல் ஆதி திராவிடர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கு வதற்காக அரசு கையகப் படுத்தியது.

    அதற்காக அப்போது வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை என்றும் அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் நாமக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வழக்கை நடத்தி வந்தனர். தற்போது ராசிபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

    கடந்த 2008-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுமார் ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த தொகையை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்குவதில் காலதாமதம் செய்து வருவதால் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை அமுல்படுத்தா ததால் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தர விட்டார். இதையடுத்து நேற்று கோர்ட்டு ஊழி யர்கள் ஜப்தி செய்ய தாசில்தார் அலுவல கத்திற்குச் சென்றனர்.

    ஆனால் தாசில்தார் சுரேஷ், மாவட்ட கலெக்ட ரிடம் எடுத்துச் சொல்லி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது ஜப்தி செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதால் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்யாமல் திரும்பிச் சென்றனர்.

    தாசில்தார் அலுவல கத்தை கோர்ட்டு ஊழியர் கள் ஜப்தி செய்ய சென்ற தால் ராசிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பட்டுப் புழு வளர்ப்பு தொழிலில் நிச்சயம் வெற்றி பெறலாம்.
    • பெண்கள் நிலையான வருமானத்தைப் பெற முடியும்.

    பெண்கள் முழு நேரம் அல்லது பகுதி நேரத் தொழிலாக செய்து, வருமானம் ஈட்டக்கூடிய சுய தொழில்களில் ஒன்று 'பட்டுப்புழு வளர்ப்பு'. இதில் ஒரு முறை மட்டும் முதலீடு செய்தால் போதும், நிலையான வருமானத்தைப் பெற முடியும். பெண்கள் பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளும், சில தனியார் நிறுவனங்களும் சிறப்பு பயிற்சி அளிக்கின்றன.

    அவற்றை பயன்படுத்திக் கொண்டால், பட்டுப் புழு வளர்ப்பு தொழிலில் நிச்சயம் வெற்றி பெறலாம். பட்டுப்புழு கூடாரம், தேவையான கருவிகள் என அனைத்துக்கும் ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஒரு முறை முதலீடு செய்வது போதுமானது. பட்டுப்புழு வளர்ப்புக்கு சுத்தமான சுற்றுச்சூழலும், சீரான சீதோஷ்ண நிலையும் அவசியம்.

    எஸ் 35 பட்டுப்புழு அல்லது வி1 வகை பட்டுப்புழுக்களை எளிதாக வளர்க்கலாம். இதற்கு பெரிய அளவில் இடம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்குக் கிடைக்கும் இடத்தின் அளவைப் பொறுத்து, பட்டுப்புழு வளர்ப்பு முறையைத் தேர்வு செய்யலாம்.

    பட்டுப்புழுவுக்கு உணவாகும் மல்பெரி செடி வளர்ப்புக்கு ஏற்றவாறு சொட்டுநீர்ப் பாசனம் அமைப் பதற்கு இணை வரிசை நடவு முறையை (90 செ.மீ X 90 செ.மீ மற்றும் 60 செ.மீ X 60 செ.மீ) பின்பற்றலாம். இது இடை உழவு செய்வதற்கும், எளிதாக அறுவடை செய்வதற்கும் ஏற்றதாக இருப்பதுடன், ஈரப்பதம் குறைவதையும் தடுக்கும்.

    ஒரு வருடத்தில் தொழு உரத்தை 2 முறையும், தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை 5 முறையும் உரமாக இட வேண்டும். 80 முதல் 120 மில்லி மீட்டர் அளவில் வாரம் ஒரு முறை நீர் பாசனம் செய்யலாம். தினமும் மூன்று முறை புழுக்களுக்கு உணவு அளிக்க வேண்டும். 80 நாட்கள் இடைவெளியில், வருடத்துக்கு 5 முதல் 10 முறை வரை அறுவடை செய்யலாம். அரசு, மூன்று நிலையான பட்டுப்புழு வளர்ப்பு அமைப்புக்கு ரூ.63 ஆயிரம் முதல் 87 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. மேலும், அரசின் திட்டம் மூலமாகவும் வர்த்தகத்தை மேற்கொள்ளலாம்.

    பட்டுப்புழுவை பாதிக்கும் நோய்கள்

    வருடம் முழுவதும் புழுக்களை வளர்ப்பதாலும், காலத்துக்கு ஏற்றபடி மாறும் சீதோஷ்ண நிலையின் காரணமாகவும், பட்டுப்புழு எளிதாக நோய்க்கிருமிகளால் தாக்கப்படும். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பெப்ரைன் நோய்கள் பட்டுப்புழுவை அதிகம் தாக்கும். வைரசால் ஏற்படும் 'கிராஸரி நோய்' பட்டுப்புழுவை வெகுவாகப் பாதிக்கும்.

    இது புழுவின் தோலில் மினுமினுப்பையும், எண்ணெய்த் தன்மையையும் உண்டாக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட புழுக்கள், ஒரே இடத்தில் இருக்காமல் அங்கும் இங்கும் நகர்ந்துக்கொண்டே இருக்கும். கால்கள் பிடிமானத்தை இழந்து புழுக்கள் தலைகீழாகத் தொங்கத் தொடங்கும். புழுக்களின் தோல் மெலிந்து, வெள்ளை நிற திரவம் வெளியாகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட புழுக்கள் 7 நாட்களில் உயிரிழக்கும். இதனால் லாபம் வெகுவாகக் குறையும்.

    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நரியனூர் காலனியை சேர்ந்த பாக்கியலட்சுமி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.

    தர்ணா போராட்டம்

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நரியனூர் காலனியை சேர்ந்த பாக்கியலட்சுமி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

    முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த ஏழை மக்களாகிய எங்களுக்கு, குடியிருக்க வீடு இல்லாமல் மழை காலங்களில் ஒரே வீட்டில் 3, 4 குடும்பங்கள் என அடைபட்டு கிடக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பள்ளிப்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமாக குண்று நிலம் அதிகமாக உள்ளது. அந்த நிலத்தில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

    இதேபோல தலைவாசல் அருகே உள்ள பெரியேரி காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் சுமார் 30 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், ரூ.1500 உதவித் தொகையை உயர்த்தி வழங்குவதுடன், வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூர் பாகல்பட்டி கிராமம் தாசநாயக்கன்பட்டி அருந்ததிர் காலனி மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடன் உதவி கேட்டு

    சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,

    சேலம் மாநகராட்சி 45-வது வார்டு பஞ்சதாங்கி ஏரி நரிக்குறவர் காலனியில் 42 வருடமாக வாழ்ந்து வருகிறோம். காலம் காலமாக எங்கள் சமுதாய மக்கள், ஊசி பாசி மணி மாலைகளை விற்று பிழைப்பு நடத்தி வருகிறோம்.

    எங்கள் சமுதாய மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த, அவர்களின் திறமை, தகுதிக்கேற்ப அண்ணல் அம்பேத்கார் மற்றும் தாட்கோ மூலம் கடன் உதவி அளித்து நரிக்குறவர் சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    அரசும் மானிய கடன் வழங்க முன் வந்தாலும் வங்கியில் உள்ள மேல் அதிகாரிகள் மானியக் கடன் தர தயக்கம் காட்டுகிறார்கள். ஆகவே அரசு அதிகாரிகளும், எங்கள் மீது கருணை கூர்ந்து மானிய கடன் உதவி பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    ×