உள்ளூர் செய்திகள்

ஓமல்நத்தத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

Published On 2023-01-11 10:18 GMT   |   Update On 2023-01-11 10:18 GMT
  • நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர்.
  • பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆயிரம் உள்ளிட்டவற்றை வழங்கி தொடங்கி வைத்தார்.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏலகிரி ஊராட்சி ஓமல்நத்தம் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர்.

அதன்படி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கரும்பு மற்றும் ரொக்கம் 1000 உள்ளிட்டவற்றை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக ஏலகிரி ஊராட்சி ஓமல்நத்தம் நியாயவிலைக் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை நல்லம்பள்ளி தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் மல்லமுத்து கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆயிரம் உள்ளிட்டவற்றை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏலகிரி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி மணி, கூட்டுறவு சங்க செயலாளர் சண்முகம், கூட்டுறவு சங்க தலைவர் முனுசாமி, து.தலைவர் சக்தி, முருகன், வீரமணி, ஜம்பேரி அருணகிரி, மாது, ரங்கநாதன், கிருஷ்ணன், முருகேசன், மந்திரி (எ) கிருஷ்ணன், ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News