உள்ளூர் செய்திகள்
திண்டிவனத்தில் பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்த ரவுடி கைது
திண்டிவனத்தில் பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்:
திண்டிவனம் ரோசனை போலீஸ்இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தீவனூர் பஸ் நிலையம் அருகே ஒருவர் சாலையின் குறுக்கே நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்து, பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தீவனூர் கிராமத்தை சேர்ந்த ரவுடி பிரவின்(வயது 34) என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து பிரவீனை கைது செய்தனர்.