உள்ளூர் செய்திகள்

கருமத்தம்பட்டியில் குட்கா விற்றவர் கைது

Published On 2022-11-14 09:19 GMT   |   Update On 2022-11-14 09:19 GMT
  • குட்கா விற்கப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
  • மளிகை கடையில் இருந்து 97 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

சூலூர்,

சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் செம்மாண்டம் பாளையம் பகுதியில் குட்கா விற்கப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கருமத்த ம்பட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் ராஜதுரை உத்தரவின் பேரில் போலீசார் செம்மாண்டம் பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மளிகை கடையில் குட்கா பொருட்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதில் 97 கிலோ குட்கா கருமத்தம்பட்டி போலீசாரல் கைப்பற்றப்பட்டது மேலும் மளிகை கடை உரிமையாளரான மணிகண்டன்(33) கைது செய்யப்பட்டார். இவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News