உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள்

திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-19 07:23 GMT   |   Update On 2022-06-19 07:23 GMT
  • திண்டுக்கல் போக்குவரத்து பணிமனை முன்பு தொழிலாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • பல்வேறு தீர்மானங்கள் குறித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திண்டுக்கல்:

திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும். ஓய்வூதியம் சீரமைப்பு குழு பரிந்துரையின்படி அரசு பொறுப்பு ஏற்று ஓய்வூதியம் வழங்கவேண்டும். 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் டி.ஏ உயர்வை வழங்கவேண்டும்.

ஏப்ரல் 2020 முதல் ஓய்வு, விருப்ப ஓய்வு, இறந்த தொழிலாளர்களுக்கு பணபலன் நிலுவையில் உள்ளது. அதனை உடனே வழங்கவேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஏ.ஐ.டி.யு.சி பொதுச்செயலாளர் அய்யப்பன், பேரவை செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

Tags:    

Similar News