உள்ளூர் செய்திகள்
சேலத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.
சேலம்:
சேலத்தில் இருந்து எடப்பாடிக்கு ஒரு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. பஸ்சை பூலாம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் ராஜா (வயது48) என்பவர் ஓட்டினார்.
பஸ் கந்தம்பட்டி பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அதன் மீது கல் வீசினர். இதில் பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்தது.
இதனையடுத்து டிரைவர் ராஜா சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல் வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.