உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனையில் பிறந்த ஒரு குழந்தைக்கு, ராஜா எம்.எல்.ஏ. தங்க மோதிரம் அணிவித்த காட்சி.

சங்கரன்கோவிலில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.

Published On 2023-03-07 09:14 GMT   |   Update On 2023-03-07 09:14 GMT
  • நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார்.
  • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கினார்.

இதில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர்கள் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார், இளைஞர் அணி சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், மூத்த உறுப்பினர் சந்திரன், வார்டு செயலாளர்கள் தங்கவேல், துரைபாண்டியன், காளிச்சாமிபாண்டியன், கணேசன், வைரவேல், சதாசிவம், செந்தில்குமார், சுப்பிரமணியன், மாரிராஜ், ஆறுமுகம், சங்கரன், வீராசாமி, வீரமணி, தடிகாரன், சரவணன், முத்துக்குமார், கோமதிநாயகம், மாரியப்பன், சுப்பராஜ் மற்றும் கேபிள் கணேசன், அன்சாரி, சபரிநாத், தாஸ், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News