தச்சநல்லூர் அருகே கிணற்றில் இறந்து கிடந்த ஆடுகள்- போலீசார் விசாரணை
- சம்பவத்தன்று மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு திரும்பவில்லை.
- நாய்கள் துரத்தியபோது தப்பிப்பதற்காக கிணற்றில் விழுந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
தச்சநல்லூர் அருகே உள்ள சேந்திமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 65). இவர் சொந்தமாக ஆடு வளர்த்து வருகிறார். தினமும் ஆடுகளை மேய்சலுக்கு திறந்து விடுவார். மாலையில் அவை மீண்டும் வீடு திரும்புவது வழக்கம்.
சம்பவத்தன்று மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு திரும்பவில்லை. இதனால் அவர் அப்பகுதியில் தேடிச்சென்றார். ஆனால் அவைகளை அங்கு காணவில்லை.இந்நிலையில் சேந்திமங்கலத்தில் உள்ள ஒரு கிணற்றில் 4 ஆடுகள் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது.
மேலும் கிணற்றின் அருகில் நாய்கள் கடித்து குதறிய நிலையில் மேலும் ஒரு ஆடு இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றபோது தவறி கிணற்றில் விழுந்த இறந்ததா? அல்லது நாய்கள் துரத்தியபோது தப்பிப்பதற்காக சென்றபோது கிணற்றில் விழுந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.