உள்ளூர் செய்திகள்
புன்னைநகர் வனதிருப்பதி கோவிலில் கருட சேவை
- ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலிருந்து சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவித்த மாலையை சீனிவாசபெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது.
- மாலையில் நெல்லை பாரதி கலைக்குழுவினரின் பக்தி பரதநாட்டியம், பெருமாள் திருவீதி உலா, கருட சேவையும் நடைபெற்றது.
உடன்குடி:
புன்னைநகர் வனத்திருப்பதி சீனிவாசபெருமாள், ஆதிநாராயணர், சிவனணைந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று மூலவர் உற்சவர் திருமஞ்சனம், மூலவர் புஷ்ப அலங்காரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலிருந்து சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவித்த மாலையை சீனிவாசபெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் திருவாராதனம் தளிகை சாத்துமுறை கோஷ்டி, மாலையில் நெல்லை பாரதி கலைக்குழுவினரின் பக்தி பரதநாட்டியம், பெருமாள் திருவீதி உலா, கருட சேவையும் நடைபெற்றது. தொடர்ந்து வான வேடிக்கையும் நடந்தது. காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் ராஜகோபாலின் மகன் சரவணன் உத்தரவின் பேரில் கோவில் மேலாளர் வசந்தன் செய்திருந்தார்.