search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garuda Seva"

    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.
    • திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    போரூர்:

    பிரசித்தி பெற்ற வட பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. கடந்த 3 நாட்களாக தினசரி காலை மற்றும் மாலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.

    இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வடபழனி முருகன்கோவிலில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு உச்சி காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து ஏராளமான பெண்கள், ஆண்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பால் குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இன்று இரவு 7மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சாமி புறப்பாடு நடக்கிறது. இதைத்தொடர்ந்து நாளை முதல் வருகிற 27-ந்தேதி வரை 3 நாட்களும் இரவு 7 மணிக்கு திருக்குளத்தில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

    பாரிமுனை, ராசப்பா செட்டி தெருவில் உள்ள கந்தக்கோட்டை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோவிலில் கருட சேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.

    மேலும் 3 பெருமாளும் கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவில் வளாகத்தை சென்றடைந்தனர். மற்ற கோவில்களில் ஒரு கருட சேவை மட்டும் நடைபெறும். ஆனால் இங்கு மட்டும் 3 கருட சேவை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாலையில் 3 பெருமாளுக்கும், திருக்கச்சி நம்பிகளுக்கும் அலங்கார திருமஞ்சனமும், திருப்பாவை சாற்று முறை தீர்த்த பிரசாத விநியோகமும் நடைபெறுகிறது.

    திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தங்கவேல், தங்கக் கீரிடம், வைர ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடு முறை மற்றும் பங்குனி உத்திரம் என்பதால் மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து இருந்தனர். இதனால் பொது வழியில் மூலவரை தரிசிக்க பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 108 வைணவ திவ்ய தலங்களில் 45-ம் திவ்ய தேசமாகும்.
    • நின்ற நாராயணப்பெருமாள்' நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ளத தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. விரும்பும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புபவர்கள் திருநின்ற நாராயண பெருமாளை வேண்டி வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறும்.

    திருமணத் தடை உள்ளவர்கள் பெருமாளையும், தாயாரையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கு பரிவட்டம் சாற்றி வழிபடுகின்றனர். சிலர் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்தும், புளியோதரை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்தோற்சவம், ஆனி பிரமோற்சவம், ஆவணி பவித்ரோற்சவம், புரட்டாசி கருட சேவை, பங்குனி திருக்கல்யாண உற்சவம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

     தல வரலாறு

    இந்த கோவிலில் மூலவராக திருநின்ற நாராயண பெருமாள் வீற்றிருக்கிறார். செங்கமலத்தாயார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோயிலில் கொடிமரம் உள்ளது. பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன. ஸ்ரீரங்கம், அழகர்கோவில் போன்று இங்கும் சோமசந்திர விமானம் உள்ளது.

    திருத்தங்கல்லில் உள்ள `தங்காலமலை' என்ற குன்றின் மீது திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. கோயிலை கட்டியவர் குறித்து விபரம் எதுவும் இல்லை.

    இந்த கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 45-ம் திவ்ய தேசமாகும். 2 நிலைகளாக உள்ள இந்த கோயிலில் முதல் நிலை கோயிலில் மூலவரான 'நின்ற நாராயணப்பெருமாள்' நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என திருநாமங்கள் உள்ளன. 2-ம் நிலை கோவிலில் செங்கமலத்தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    • ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலிருந்து சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவித்த மாலையை சீனிவாசபெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது.
    • மாலையில் நெல்லை பாரதி கலைக்குழுவினரின் பக்தி பரதநாட்டியம், பெருமாள் திருவீதி உலா, கருட சேவையும் நடைபெற்றது.

    உடன்குடி:

    புன்னைநகர் வனத்திருப்பதி சீனிவாசபெருமாள், ஆதிநாராயணர், சிவனணைந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று மூலவர் உற்சவர் திருமஞ்சனம், மூலவர் புஷ்ப அலங்காரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலிருந்து சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவித்த மாலையை சீனிவாசபெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் திருவாராதனம் தளிகை சாத்துமுறை கோஷ்டி, மாலையில் நெல்லை பாரதி கலைக்குழுவினரின் பக்தி பரதநாட்டியம், பெருமாள் திருவீதி உலா, கருட சேவையும் நடைபெற்றது. தொடர்ந்து வான வேடிக்கையும் நடந்தது. காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் ராஜகோபாலின் மகன் சரவணன் உத்தரவின் பேரில் கோவில் மேலாளர் வசந்தன் செய்திருந்தார்.

    • புரட்டாசி 3-வது சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
    • விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    களக்காடு:

    திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருமலை நம்பி கோவில் உள்ளது.

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை களில் கருட சேவை விழா நடப்பது வழக்கம்.

    அதன்படி புரட்டாசி 3-வது சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனம், சிறப்பு தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு உச்சி கால பூஜை, அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது.

    இதையடுத்து மாலையில் கருட சேவை நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களி லிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் குடும்பத்தோடு மலைப் பாதையில் நடந்து கோவிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்க ளுக்கு அன்ன தானமும் வழங்கப்பட்டது. திருக்கு றுங்குடி வனச்சரகர் யோகேஷ்வரன் தலைமையில் வனப் பகுதியில் களக்காடு, திருக்குறுங்குடி, மேலகோதை யாறு வனச்சர கங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழி யர்களும், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையில் திருக்குறுங்குடி, ஏர்வாடி, களக்காடு போலீசார் 30-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • திருப்பதியில் மாதம்தோறும் பவுர்ணமி கருட சேவை நடந்து வருகிறது.
    • பவுர்ணமியையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதம்தோறும் பவுர்ணமி கருட சேவை நடந்து வருகிறது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) குரு பூர்ணிமா பவுர்ணமியையொட்டி கருட சேவை நடக்கிறது.

    உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    பவுர்ணமியையொட்டி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 82,999 பேர் சாமி தரிசனம் செய்தனர். 38,875 பக்தர்கள் முடீ காணிக்கை செலுத்தினர்.

    ரூ.4.27 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • மாட வீதி உலா நடந்தது.
    • தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    நவதிருப்பதி கோவில்களில் 9-வது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்த வைகாசி மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று வருசாபிஷேகம் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வருசாபிஷேகம் நேற்று நடந்தது.

    அதனை முன்னிட்டு கோவிலில் காலை 5 மணிக்கு விஸ்வரூபம், காலை 7 மணிக்கு ஹோமம் நடந்தது. காலை 8.30 மணிக்கு பூர்ணாகுதி, காலை 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், காலை 10 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்யப்பிரபந்தம், பகல் 12 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    மாலை 5 மணிக்கு சாயரட்சை நடந்தது. இரவு 7 மணிக்கு சுவாமி பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் மாட வீதி உலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர், நிர்வாக அதிகாரி அஜித், உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    • 24 கருட சேவை விழா நேற்று நடைபெற்றது.
    • கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதிகளில் வலம் செல்லும் வைபவம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை ஆகியவை சார்பில் 89 ஆம் ஆண்டு கருட சேவைப் பெருவிழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் கடந்த 8-ந் தேதி தொடங்கியது.

    தொடர்ந்து, 24 கருட சேவை விழா நேற்று நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து, 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி பெருவிழா என்கிற நவநீத சேவை விழா இன்று காலை நடைபெற்றது.

    இதில், வெண்ணாற்றங்க ரை நீலமேகப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிகுன்றப் பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், மேல வீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் கோயில் தெரு ஜனார்த்தனப் பெருமாள், கரந்தை யாதவக் கண்ணன், கீழ வீதி வரதராஜப் பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமிப் பெருமாள், மகர்நோம்பு சாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாதப் பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகிய கோவில்களிலிருந்து காலை புறப்பாடு நடைபெற்றது.

    இதையடுத்து, அந்தந்த கோவில்களிலிருந்து கொடிமரத்து மூலைக்குச் சென்றடைந்து, பின்னர், கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதிகளில் வலம் செல்லும் வைபவம் நடைபெற்றது.

    இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இந்த விழா நாளை (ஞாயிற்றுக்கி ழமை) விடையாற்றியுடன் முடிவடைகிறது.

    • பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது.
    • சுவாமி வீதி உலா நடந்தது.

    ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் ஆன்மீக சிறப்புவாய்ந்த நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன. இதில் முதலாவது திருப்பதியான கள்ளபிரான் கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கும்பாபிசேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு வைகாசி மாத திருவோண நட்சத்திரத்தில் இந்த ஆண்டு கள்ளபிரான் சுவாமி கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது.

    இவ்விழாவை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம் , காலை 8 மணிக்கு கும்ப தீர்த்தம் வைக்கப்பட்டு காலை 9 மணிக்கு ஹோமம், காலை 9.30 மணிக்கு பூர்ணாகுதி, காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்கனம், காலை 11 மணிக்கு தீபாராதனை நாலாயிர திவ்ய கோஷ்டி, பகல் 12 மணிக்கு சாத்துமுறை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு உற்சவர் கள்ளபிரான் சுவாமி வாகனத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் கள்ளபிரான் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு சுவாமி வீதி உலா நடந்தது. முக்கியவீதிகள் வழியாக சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு, நாராயணன், ராமானுசம், சீனு, ஸ்தலத்தார்கள்ராஜப்பாவெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், கண்ணன், நிர்வாக அதிகாரி கோவலமணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜீத் உள்பட திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பக்தர்கள் பெருமாளுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
    • கருட சேவையை முன்னிட்டு ஆங்காங்கே அன்னதானம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜ தர்சன சபை சார்பில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவோண நட்சத்திரத்தில் தஞ்சையில் 24 கருட சேவை நிகழ்ச்சி நடத்தப்படும்.அதன்படி, இந்த ஆண்டுக்கான கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    தஞ்சாவூரில் உள்ள வைணவ கோவில்களில் முதன்மையானதாக விளங்கும் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோவிலில் 89-வது ஆண்டு கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு இன்று காலை தஞ்சாவூர் நீலமேகப்பெருமாள் கோவில், மணிகுன்றப் பெருமாள் கோவில், மேல சிங்கப்பெருமாள் கோவில், வேளூர் வரதராஜர் கோவில், கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், நவநீதகிருஷ்ணன் கோவில், மேலவாசல் ரெங்கநாதர் கோவில், விஜயராமர் கோவில், கோவிந்தராஜ பெருமாள் கோவில், ஜனார்த்தன பெருமாள் கோவில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், கீழ கோதண்டராமர் கோவில், கீழ சிங்கபெருமாள்கோவில், பூலோக கிருஷ்ணர் கோவில், படித்துறை வெங்கடேசப் பெருமாள் கோவில், பஜார் ராமர் கோவில் உள்ளிட்ட 24 கோவில்களிலிருந்து கருட வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வரிசையாக கொடிமரத்து மூலை, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக வந்து பொதுமக்களுக்கு அருள்பாலித்தனர்.

    அப்போது பக்தர்கள் பெருமாளுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும், 24 பெருமாளையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்ய வெளியூர் மற்றும் உள்ளூரிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் 4 ராஜ வீதிகளிலும் பக்தர்கள் திரண்டனர்.

    கருட சேவையை முன்னிட்டு ஆங்காங்கே தன்னார்வ அமைப்புகள் சார்பில் அன்னதானம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது. இதையடுத்து முற்பகலில் பெருமாள் சுவாமிகள் மீண்டும் அந்தந்த கோவிலை அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    உற்சவர் வைகுண்டப் பெருமாள் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் ஜொலிக்க சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
    காஞ்சீபுரம் குண்டவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 26-ந் தேதி அதிகாலை கொடியேற்றதுடன் தொடங்கியது.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய வைபவமான கருட சேவை உற்சவம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

    அதையொட்டி உற்சவர் வைகுண்டப் பெருமாள் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் ஜொலிக்க சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    அர்ச்சகர்கள் சிறப்பு ஆராதனைகள்,கற்பூர தீபாராதனைகள் காட்டினார்கள். மேள தாளங்கள் முழங்க கோவில் வெளிபிரகாரத்தை வந்தடைந்து பின்னர் பஜனை கோஷ்டியினர் பஜனை பாடல்கள் பாட, மேள தாளங்கள் முழங்கியப்படி உற்சவர் வைகுண்டப்பெருமாள் கருட வாகனத்தில் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

    வழி நெடுகிலும் திரண்டிருந்த திரளான பக்தர்கள் பூ, வாழைப்பழம், கற்பூர தீபாராதனைகளை தாம்பூல தட்டுகளில் ஏந்தியவாறு "கோவிந்தா கோவிந்தா" என பக்தி பரவச கோஷங்களை எழுப்பினார்கள். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

    பிரம்மோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் செயல் அலுவலர் பூவழகி மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.
    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    நவதிருப்பதி கோவில்களில் 9-வது ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வருக்ஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம். அதனை தொடர்ந்து 8 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது.

    பின்னர் காலை 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கலசங்கள் திருமஞ்சனம் முடிந்து, காலை 10.30மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சுவாமி பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் ஹம்ஸ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இதில் எம்பெருமானார் ஜீயர், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். கருடசேவையில் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராம மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    ஸ்ரீவைகுண்டம் கள்ளப் பிரான் கோவிலில் கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    நவ திருப்பதி தலங்களில் முதல் திருப்பதி தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளப் பிரான் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் கும்பாபிஷேக தினத்தில் வருஷாபிஷேக விழாவில் கருடசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு விஸ்வரூபம், 10 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. 11 மணிக்கு பூர்ணாகுதி, 11.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 12 மணிக்கு தீபாராதனை, 1 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி, மாலை 6 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு சுவாமி கள்ளப்பிரான் வாகனக்குறட்டிற்கு எழுந்தருளினார். 8.30 மணிக்கு கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்நிகழ்வில் நிர்வாக அதிகாரி கோவல மணி கண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி தலத்தார்கள் சீனிவாசன், ராஜப்பா வெங்கடாச்சாரி, ஸ்ரீனிவாசன், தேவராஜன், திருவேங்கடத்தான், வேங்கட கிருஷ்ணன் ஆகி யோர் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×