என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஸ்ரீவைகுண்டம் அருகே இரட்டை திருப்பதி கோவிலில் கருட சேவை
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இரட்டை திருப்பதி கோவிலில் கருடசேவை நடந்ததை படத்தில் காணலாம்.
நவ திருப்பதிகளில் 4-வது திருப்பதியான தொலைவில்லி மங்கலத்தில் உள்ள இரட்டை திருப்பதி கோவிலில் கடந்த 6-ந்தேதி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்து வந்தது.
நேற்று 5-வது நாளில் காலை 8 மணிக்கு விஸ்வரூபம், யாகசாலை ஹோமம், 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், நாலாயிரதிவ்ய பிரபந்தம் சேவிக்கப்பட்டு தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு உற்சவர் செந்தாமரைக் கண்ணன், உற்சவர் தேவர் பிரான் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த கருடசேவையில் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரத்திலுள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நவ.16-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்