என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pangunith festival"

    • களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • திருவிழாவின் 5-ம் நாளான நேற்று கருட சேவை விழா நடந்தது.

    களக்காடு:

    களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினசரி காலையில் சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடந்து வருகிறது.

    திருவிழாவின் 5-ம் நாளான நேற்று கருட சேவை விழா நடந்தது. இதனை முன்னிட்டு வரதராஜ பெருமாள், வெங்கடாஜலபதி மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் வரதராஜபெருமாளும், வெங்கடாஜலபதி சுவாமிகளும் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க ரத வீதிகளில் உலா வந்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், 8-ம் நாளான 3-ந் தேதி (திங்கட்கிழமை) பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளிகிறார். 10-ம் நாளான 5-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    ×