உள்ளூர் செய்திகள்

இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது.

இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்

Published On 2022-09-16 10:16 GMT   |   Update On 2022-09-16 10:16 GMT
  • முகாமில் பெண்கள் உட்பட 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
  • 105 நபர்கள் மதுரையிலுள்ள கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதுக்கூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினம் நகராட்சி பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிராம்பட்டினம் லயன் சங்கம், பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடத்தினர்.

முகாமிற்கு அதிராம் பட்டினம் லயன் சங்க சாசன தலைவர் லயன் பேரா. அப்துல் காதர், மாவட்ட தலைவர்கள் லயன் எஸ். எம். முகமது முகைதீன், அகமது, அப்துல் ஜலீல், அப்துல் ரஹ்மான், இயக்குனர்கள் லயன் அப்துல் ஹமீது, லயன் ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். முகாமை மாவட்ட முன்னாள் ஆளுநர் பி.எம்.ஜே.எப். லயன் எஸ்.முகமது ரபி துவக்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் சுப்ரமணியன், எம்சி.அலுமினி லயன்ஸ் சங்க சாசன தலைவர் அமல் ஸ்டாலின் பீட்டர் பாபு, நகர் மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் ஒருங்கிணைப்–பாளராக லயன் பேரா. செய்யது அஹமது கபீர், மாவட்ட தலைவர் மற்றும் லயன் குப்பாசா அகமது கபீர், துணைத்தலைவர்ஆகியோர் இருந்தனர். இந்த முகாமில் பெண்கள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொ ண்டனர். இதில் 105 பேர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் லயன் சங்க தலைவர் மேஜர் டாக்டர் கணபதி, செயலாளர் டாக்டர் லயன் முருகானந்தம், பொருளாளர் லயன் செல்வராஜ் உட்பட அதிரை லயன் சங்க நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், இயக்கு னர்கள் உறுப்பினர்கள் என பல கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News