உள்ளூர் செய்திகள்

நெல்லை கொட்டி காயவைத்துள்ள விவசாயிகள்.

ஈரப்பதமான நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2022-10-07 07:17 GMT   |   Update On 2022-10-07 07:17 GMT
  • குறுவை சாகுபடி அறுவடை செய்து விற்பனைக்காக கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்தனர்.
  • ஈரப்பதம் 17 சதவீதம் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும்.

திருவையாறு:

திருவையாறு அருகே கீழதிருப்பந்துருத்தியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கீழ திருப்பந்துருத்தி, மேல திருப்பந்துருத்தி, சங்கராகுளம், கண்டியூர், காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150- க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி அறுவடை செய்து விற்பனைக்காக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொண்டு வந்தனர்

ஆனால் நேரடி நெல் கொள்முதல்நிலையத்தில் ஈரப்பதம் 17 சதவீதம் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும் என்று பட்டியல் எழுத்தர் மற்றும் பணியாளர்கள் தெரிவித்ததால் விவசாயிகள் அதிர்ந்து போயினர்.

நெல்மூட்டைகளை உடனடியாக நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள் முதல் செய்யவில்லை என்றால் நெல் மூட்டைகளை நெடுஞ்சாலையில் கொட்டி போராட்டம் நடத்தப் போவதாகவும் விவசாயிகள் கூறினர்.

Tags:    

Similar News