உள்ளூர் செய்திகள்

குறுவை தொகுப்பு திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெறலாம் - வேளாண் உதவி இயக்குனர் தகவல்

Published On 2022-07-02 07:54 GMT   |   Update On 2022-07-02 07:54 GMT
  • மானியத்தில் ரசாயன உரங்கள் 4000 ஏக்கருக்கு வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு உரம் வழங்கிட ஆணை வழங்கப்பட்டுள்ளது.
  • விதைகள் மற்றும் உயிர் உரங்கள் 50 சதவீதம், பொதுப்பிரிவினருக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 70 சதவீதம் மான்ய விலையிலும் வழங்கப்படுகிறது.

பூதலூர்:

பூதலூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு குறுவை சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு மானியத்தில் இடுபொருட்கள் விநியோகம் செய்திட குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.பூதலூர் வட்டாரத்திற்கு 100 சதவீதம் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் மானியத்தில் ரசாயன உரங்கள் 4000 ஏக்கருக்கு வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு உரம் வழங்கிட ஆணை வழங்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை யுரியா (45 கி), ஒரு மூட்டை டி.ஏ.பி (50 கி) மற்றும் அரை மூட்டை பொட்டாஷ் (25 கி) மட்டும் வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்களது நடப்பு ஆண்டு பசலியில் குறுவை சாகுபடி செய்துள்ளார் என சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் - 1 ஆகியவற்றுடன் கைபேசி எடுத்துக்கொண்டு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பயன்பெற கேட்டு–கொள்ளப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட ஆவணங்களை உழவன் செயலியில் நேரடியாக விவசாயிகள் பதிவு செய்யலாம். மேலும் பதிவு செய்த பிறகு அந்த ஆவணங்களுடன் உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி உரங்கள் பெற ஆணை பெற்றுக்கொள்ளலாம். குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்கு விக்க ஆடிப்பட்டத்தில் உளுந்து, கடலை மற்றும் சிறுதானியப்பயிரான ராகி சாகுபடி செய்ய விதைகள் மற்றும் உயிர் உரங்கள் 50 சதவீதம், பொதுப்பிரிவினருக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 70 சதவீதம் மான்ய விலையிலும் வழங்கப்படுகிறது.எனவே விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News