உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே போலி மருத்துவர் கைது

Published On 2022-06-13 09:10 GMT   |   Update On 2022-06-13 09:10 GMT
  • களக்காடு அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
  • மருத்துவருக்கு படிக்காமல் சுற்று வட்டார மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார்.

களக்காடு:

திருக்குறுங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராம கிருஷ்ணன் மற்றும் போலீசார் கைகாட்டி விலக் கில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி செல்ல முயற்சி செய்தார்.

போலீசார் அவரை பிடித்து அவர் வைத்திருந்த கைப்பையை சோதனையிட்டனர். அந்த பையில் மருந்து பொருட்கள் இருந்ததை கண்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் கொய்யா மாவடியை சேர்ந்த பால்துரை (60) என்பதும், அவர் மருத்துவருக்கு படிக்காமல் சுற்று வட்டார மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News