உள்ளூர் செய்திகள்

கோவையில் மன நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் கைது

Published On 2022-10-08 09:13 GMT   |   Update On 2022-10-08 09:13 GMT
  • இளம்பெண் கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார்.
  • இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று என்ன நடந்தது என கேட்டார்.

கோவை

கோவை போத்தனூரை சேர்ந்த 22 வயது இளம்பெண். இவர் கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இவரை அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் உறவுக்கார பெண் கவனித்து வந்தார்.

சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த லோடுவேன் டிரைவர் வரதராஜன் (வயது 43) என்பவர் இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து வரதராஜன் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற உறவுக்கார பெண் அவர் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது இளம்பெண் வரதராஜன் வீட்டில் நிர்வாண நிலையில் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவர் இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று என்ன நடந்தது என கேட்டார். அப்போது இளம்பெண் தன்னை வரதராஜன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

இது குறித்து இளம்பெண்ணின் உறவுக்கார பெண் கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த டிவைர் வரதராஜனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

Tags:    

Similar News