உள்ளூர் செய்திகள்

சுரண்டையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்ட காட்சி.


சுரண்டையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

Published On 2022-06-05 10:08 GMT   |   Update On 2022-06-05 10:08 GMT
  • சுரண்டையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
  • பேரணி மற்றும் மனித சங்கிலி நடைபெற்றது.

சுரண்டை:

சுரண்டை நகராட்சியின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி நடைபெற்றது.

பேரணியில் பொதுமக்கள் அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் நகராட்சியை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென சிறப்புரை ஆற்றினார். பின்னர் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

சுரண்டை நகராட்சி ஆணையர் லெனின், சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன், துணைத்தலைவர் சங்கராதேவி தலைமையில் நகர்ப்புறங்களை சுத்தமாக வைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் எ.கே.எஸ்.சேர்மசெல்வம் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

சுரண்டை நகராட்சி நிர்வாகிகள், சுகாதார துறையினர்கள், அன்னை நர்சிங் இன்ஸ்டியூட் மாணவர்கள் மூலம் மனிதசங்கிலி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Tags:    

Similar News