உள்ளூர் செய்திகள்

குடிநீர் குழாயில் குளித்தது தொடர்பாக தகராறு; அரிவாள் வெட்டு- 2 பேர் கைது

Published On 2022-07-18 08:18 GMT   |   Update On 2022-07-18 08:18 GMT
  • பொதுமக்கள் குடிநீருக்கு உபயோகப்படுத்தும் குழாயில் குளிப்பதாக நன்னிலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
  • படுகாயமடைந்தவர்களை மருத்துவ சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள நல்லமாங்குடி வடக்கு தெருவை சேர்ந்த குமார் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 23). இவர் சம்பவத்தன்று பொது குடிநீர் குழாயில் குளித்துள்ளார். அதனை ஊர் நாட்டாமை அறிவானந்தம் பொதுமக்கள் குடிநீருக்கு உபயோகப்படுத்தும் குழாயில் குளிப்பதாக நன்னிலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து குமார் மகன் சுபாஷ் சந்திரபோஸ், குமார் மனைவி கலா (வயது 47) அறிவானந்தம் மகன் கார்த்திக்கிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாய்த் தகராறு முற்றிய நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் அரிவாளால் கார்த்திக்கை தாக்கியுள்ளார். பதிலுக்கு கார்த்திக்கும் கலாவை தாக்கியுள்ளார். இதில் கலாவும், கார்த்திக்கும் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த வர்களை மருத்துவ சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்அனுமதி த்துள்ளனர். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அறிவானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News