உள்ளூர் செய்திகள்

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-23 10:00 GMT   |   Update On 2022-06-23 10:00 GMT
  • பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நடந்தது
  • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

கோவை,

பெட்ரோல், டீசல் , கியாஸ்சி லிண்டர் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், ஜி.எஸ்.டி வரியை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் காலை கோவை தெற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

மாநில இணைப் பொதுச்செயலாளர் டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். இளைஞர்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாநில இணைப் பொதுச்செயலாளர் டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கோவை மாநகராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை விரைந்து செப்பனிட வேண்டும். பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சொத்து வரி உயர்வை உடனடியாக குறைத்திட வேண்டும் என தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர மாவட்ட தலைவர் முத்துச்செல்வம், மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் முருகேசன் மற்றும் நீலகிரி மாவட்ட தலைவர் ராஜ்குமார், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.எர்னஸ்ட் ராபின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News