உள்ளூர் செய்திகள்
தெய்வானை அம்மாள் கல்லூரியில் - சர்வதேச யோகா தினம்
- தெய்வானை அம்மாள் கல்லூரியில் - சர்வதேச யோகா தினம் நடைபெற்றது,
- கூடுதல் சேவை அமைப்புக்களைச் சேர்ந்த 50 மாணவியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் கல்லூரி மைதானத்தில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் அகிலா, துணை முதல்வர் பேராசிரியர் செல்வி, மாணவியர் புலமுதன்மையர் பேராசிரியர் ராஜேஷ்வரி, யோகா மாஸ்டர்வெங்கடேசன், கூடுதல் சேவை அமைப்புகளைச் சார்ந்த பேராசிரியர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும், பல்வேறு கூடுதல் சேவை அமைப்புக்களைச் சேர்ந்த 50 மாணவியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.