உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசிய காட்சி.

மின்கட்டண உயர்வை கண்டித்து தருமபுரி, கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-16 09:13 GMT   |   Update On 2022-09-16 09:13 GMT
  • தருமபுரியில் கே.பி.அன்பழகன் தலைமையில் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ. அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி,

மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று அ.தி.மு.க. சார்பில் தருமபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கி யுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும், அறிவிக்கப் பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி யும், இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

தருமபுரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவபிரசாகம், நகர செயலாளர் பூக்கடை ரவி உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டு பேசினார்.

Tags:    

Similar News