உள்ளூர் செய்திகள்

பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு உணவு பறிமானாறினார்.

சமுதாய சமையல் உணவு வங்கி- எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

Published On 2022-09-24 10:20 GMT   |   Update On 2022-09-24 10:20 GMT
  • சமையல் உணவு வங்கி சார்பில் பசி என்று வருபவர்களுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்வு.
  • பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

திருத்துறைப்பூண்டி:

பாரத மாதா சேவை நிறுவனங்களின் சார்பில் "சமுதாய சமையல் உணவு வங்கி பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு ஏழை,எளிய, நலிவுற்ற புலம்பெயர்ந்த விளிம்பு நிலையில் உள்ள மக்கள் பசியாற இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

திருவாரூரில் பாரதமாதா சமுதாய சமையல் உணவு வங்கி சார்பில் பசி என்று வருபவர்களுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்வை திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

பாரதமாதா சேவை நிறுவன ஆற்றுப்படுத்துனர் சங்கீதா மணிமாறன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, திருவாரூர் நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், நகர் மன்ற உறுப்பினரும் திமுக நகர செயலாளருமான வாரை பிரகாஷ், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் சங்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், சமூக பாதுகாப்புத்துறை நன்னடத்தை அலுவலர் புஷ்பராஜ், குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் தமிழரசன், தமிழக இயற்கை உழவர் இயக்க நிறுவனர் வரதராஜன், நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் அண்ணாதுரை, முத்தமிழ் பண்பாட்டு பேரவை தலைவர் கவிஞர் ஆரூர் சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தர்மலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில் பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் நன்றி கூறினார்.

உணவு வங்கி தொடர்பான பணிகளை பாரதமாதா சேவை நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் துர்கா தேவி அருண் மற்றும் பலர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News