உள்ளூர் செய்திகள்

வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

44-வது உலக செஸ் ஒலிம்பியாட்டை பார்வையிட வேடசந்தூர் அரசு மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி

Published On 2022-07-21 04:46 GMT   |   Update On 2022-07-21 04:46 GMT
  • சென்னை அருகே மாமல்லபுரத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் செஸ் போட்டி நடைபெற உள்ளது.
  • இதில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள மாணவ- மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.

வேடசந்தூர்:

சென்னை அருகே மாமல்லபுரத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் செஸ் போட்டி நடைபெற உள்ளது. இதில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள மாணவ- மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு அதிலும் வெற்றி பெறுபவர்களுக்கு மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் போட்டியில் பார்வையாளராக கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியில் 13 பள்ளிகளைச் சேர்ந்த 93 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் சுரேஷ்பாபு, உடற்கல்வி இயக்குனர் ஆரோக்கியசாமி, உடற்கல்வி ஆசிரியர் தாமஸ், ராபர்ட்வில்லியம், ஜான்சி, பாலசுப்பிரமணி மற்றும் ஐயப்பன், சுந்தரவடிவேல், அந்தோணி, விமல்ராஜ், ரமேஷ் ஆகியோர்கள் மேற்பார்வையாளர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை தேர்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

Tags:    

Similar News