பரமத்திவேலூர் வட்டார பகுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு சதுரங்க போட்டி
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலையில் வட்டார அளவிலான சதுரங்க போட்டி கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- இப்போட்டியில் 72 மாணவர்களும், 69 மாணவிகளும் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலையில் வட்டார அளவிலான சதுரங்க போட்டி கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை மெஹருன்னிஷா தலைமை வகித்தார்.உடற்கல்வி ஆசிரியர் ரவீந்திரன் வரவேற்றார்.பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு சதுரங்க போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில் 72 மாணவர்களும், 69 மாணவிகளும் கலந்து கொண்டனர்.வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பரமத்தி வட்டார அளவிலான சதுரங்க போட்டி பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.சதுரங்க போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
வட்டார கல்வி அலுவலர் கொளரி, தலைமை ஆசிரியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போட்டியில் பரமத்தி வட்டாரத்திற்கு உட்பட்ட நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.