உள்ளூர் செய்திகள்
நாங்குநேரியில் கோவில் சி.சி.டி.வி. காமிராக்கள் திருட்டு
- கோவில் மற்றும் வளாகத்தை சுற்றிலும் 6 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
- காமிராக்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை:
நாங்குநேரியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரு வேம்புடையார் சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் வளாகத்தை சுற்றிலும் 6 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதில் 4 சி.சி.டி.வி. காமிராக்களை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர் வெங்கடே ஷ்வரி(வயது 30) நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காமிராக்களை திருடி ச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.