உள்ளூர் செய்திகள்

நாங்குநேரியில் கோவில் சி.சி.டி.வி. காமிராக்கள் திருட்டு

Published On 2022-06-17 09:38 GMT   |   Update On 2022-06-17 09:38 GMT
  • கோவில் மற்றும் வளாகத்தை சுற்றிலும் 6 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
  • காமிராக்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை:

நாங்குநேரியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரு வேம்புடையார் சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் வளாகத்தை சுற்றிலும் 6 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதில் 4 சி.சி.டி.வி. காமிராக்களை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர் வெங்கடே ஷ்வரி(வயது 30) நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காமிராக்களை திருடி ச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News