உள்ளூர் செய்திகள்
கட்டிட நிறைவு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்
- கட்டுமான பொறியாளர் ஒப்புதலுடன் மாநகராட்சிக்கு நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
- கட்டிட நிறைவு சான்றிதழ் உடனடியாக வழங்கப்படும்
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்திடம் கட்டிடம் கட்ட அனுமதி பெற்று கட்டிடம் கட்டி முடித்த கட்டிட உரிமையாளர்கள் அதற்கான நிறைவு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.
ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளின் கீழ் உரிய படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து, கட்டிட பொறியாளர் மற்றும் பதிவு பெற்ற கட்டுமான பொறியாளர் ஒப்புதலுடன் மாநகராட்சிக்கு நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.அதனடிப்படையில், அனுமதி பெற்ற வரைபடத்தின் படி கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து கள ஆய்வு செய்து, கட்டிட நிறைவு சான்றிதழ் உடனடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.