உள்ளூர் செய்திகள்

செஞ்சி சந்தைக்கு விற்பனைக்கு வந்த ஆடுகளை படத்தில் காணலாம்.

பக்ரீத் பண்டிகை எதிரொலி : செஞ்சி வாரசந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Published On 2022-07-08 06:35 GMT   |   Update On 2022-07-08 06:35 GMT
  • பக்ரீத் பண்டிகை எதிரொலியாக செஞ்சி வாரசந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
  • செம்மறி ஆடுகள் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையிலும் கருப்பு ஆடுகள் ரூ. 8000 முதல் ரூ.15,000 விற்கபட்டது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். செஞ்சியில் சந்தையில் கருவாடுஆடுகள் அதிகளவில் விற்பனையாகும். எனவே இந்த சந்தைக்கு சேலம், தர்மபுரி, வேலூர்,ஆம்பூர் மற்றும் புதுவை பெங்களுர் போன்ற பகுதியில் இருந்தும் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள். வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகை வருகிறது. இதையொட்டி இன்று கூடிய சந்தையில்கூடுதலாக ஆடுகள்விற்பனைக்கு வந்தது. ஆடுகளைவாங்குவத ற்காக பெங்களுர் மற்றும் சேலம், திருவ ண்ணாமலை, வேலுர், தருமபுரி,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் செஞ்சி வார சந்தைக்கு வந்து குவிந்தனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வியாபாரிகள் அதிகமாக வருவார்கள் என கருதி சுற்றுவட்டார கிராம பகுதி யில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர் அதன்படி அதிக மான ஆடுகள் விற்பனைக்கு வந்த தால்தான் விலையும் சிறிதுகுறைவாகவே இருந்தது. பக்ரீத்பண்டிகை குர்பானிக்காக செம்மறி ஆடுகள் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையிலும் கருப்பு ஆடுகள் ரூ. 8000 முதல் ரூ.15,000 விற்கபட்டது. இந்த வார சந்தையில் மட்டும் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யபட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 5 கோடி ஆகும்.

Tags:    

Similar News