இறகுபந்து போட்டி- விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சாதனை
- நெல்லை குறுவட்ட அளவிலான இறகு பந்தாட்டப் போட்டி மேலப்பாளையம் பைலட் கிளப்பில் நடைபெற்றது.
- விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவன் ஜெய்சாம் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்தார்.
நெல்லை:
நெல்லை குறுவட்ட அளவிலான இறகு பந்தாட்டப் போட்டி மேலப்பாளையம் பைலட் கிளப்பில் நடைபெற்றது. இதில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவன் ஜெய்சாம் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்தார். மாணவன் அர்ஜுன் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர் தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்தார். இரட்டையர் பிரிவில் மாணவன் அர்ஜூன் மற்றும் மாணவன் ராமசுப்பிரமணியன் முதலிடம் பிடித்தனர். மாணவி ரேசிகா 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்தார்.
இரட்டையர் பிரிவில் மாணவி ரேசிகா மற்றும் மாணவி ஸ்ரீநிதி முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன், தாளாளர் திருமாறன், முதல்வர் முருகவேள், துணை முதல்வர் ஜேக்கப் துரைராஜ், உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.