உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-08-19 09:39 GMT   |   Update On 2022-08-19 09:39 GMT
  • விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் போதைப்பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • இதில் சிறப்பு விருந்தினராக பாளை உதவி கமிஷனர் பிரதீப் கலந்து கொண்டார்.

நெல்லை:

வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் போதைப்பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.

இதில் சிறப்பு விருந்தினராக பாளை உதவி கமிஷனர் பிரதீப் கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் முருகவேல், ஆசிரியர்கள், காவல்துறையினர்களுடன் சேர்ந்து மாணவ-மாணவிகளும் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிெமாழி ஏற்றனர்.

பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவகலை மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து,சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன், ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.

Tags:    

Similar News