உள்ளூர் செய்திகள்

ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் முனைவர் துரை ராயப்பனுக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் நினைவுப்பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

ரத்ததானம் வழங்கி சாதனை படைத்தவருக்கு விருது

Published On 2022-06-24 08:28 GMT   |   Update On 2022-06-24 08:28 GMT
  • அரசு விழாவில் ரத்த வங்கிகளுக்கு ரத்ததானம் கொடுத்து தேவைப்படும் நோயாளிக்கு ரத்தம் அளித்து அவர்கள் வாழ்வில் ஒளிர செய்தவர்.
  • ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் முனைவர் துரை ராயப்பனுக்கு நினைவுப்பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி:

உலக ரத்த தான கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் புலிவலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரத்த வங்கிகளுக்கு 2022-ம் ஆண்டு ரத்ததானம் கொடுத்து, தேவைப்படும் நோயாளிக்கு ரத்தம் அளித்து அவர்கள் வாழ்வில் ஒளிர செய்ததற்காக, ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர்முனைவர் நா.துரை ராயப்பனுக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் நினைவுப்பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கினர். இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட மருத்துவ கல்லூரியின் தலைமை மருத்துவ அதிகாரி ஜோசப்ராஜ், மாவட்ட ரத்த வங்கி டாக்டர் பிரதிக்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ராய் டிரஸ்ட் பரிந்துரையின் பேரில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த உடற்பயிற்சி பயிற்றுநர்பாலாஜி, சேவை சித்தர் ஜெயபிரகாஷ், ஆர்.வி. சி. டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சிவசைலம், கரூடா செல் ஷோரூம் உரிமையாளர் கார்த்தி ஆகியோருக்கும் நினைவுப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News