உள்ளூர் செய்திகள்

ஆறுமுகநேரி பஜாரில் இறந்து கிடந்த ஆட்டோ டிரைவர் - போலீசார் விசாரணை

Published On 2022-10-26 08:47 GMT   |   Update On 2022-10-26 08:47 GMT
  • ஆறுமுகநேரி காணியாளர் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் ஆட்டோ டிரைவர்.
  • நாகர்கோவிலில் வசித்து வரும் தனது தாயாரை பார்க்க சென்றிருக்கலாம் என்று உறவினர்கள் நினைத்தனர்

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி காணியாளர் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 59).ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலையில் நாகராஜன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார்.வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவர் நாகர்கோவிலில் வசித்து வரும் தனது தாயாரை பார்க்க சென்றிருக்கலாம் என்று உறவினர்கள் நினைத்தனர்.ஆனால் நாகராஜன் அங்கு செல்ல வில்லை என்பதை பிறகு அறிந்தனர். இதனால் அவரை பல இடங்களிலும் தேடியுள்ளனர்.

இந்நிலையில் ஆறுமுக நேரி மெயின் பஜாரில் உள்ள ஒரு செல்போன் கடை முன்பு மயங்கிய நிலையில் ஒருவர் கிடந்துள்ளார். அவர் நாகராஜன் தான் என்பது தெரியவந்தது. உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாகராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நாகராஜனின் மகன் சுரேஷ் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அம லோற்பவம் வழக்குப்பதிவு செய்து, நாகராஜன் எப்படி இறந்தார்? விபத்து காரணமா? உடல் நலக்குறைவு காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்கிற கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News