உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே மரத்தின் மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி

Published On 2022-09-24 07:29 GMT   |   Update On 2022-09-24 07:29 GMT
  • செஞ்சி அருகே மரத்தின் மீது ஆட்டோ மோதி டிரைவர் பலியானார்.
  • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விழுப்புரம்:

செஞ்சி பீரங்கிமேடு பகுதியை சேர்ந்தவர்வேணு இவரது மகன் சேகர்(வயது 58). இவர் செஞ்சியில் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று இவரது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கணக்கன்குப்பம் கிராமத்திற்கு சென்று பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் செஞ்சிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

அப்போது சவுட்டூர் என்ற இடத்தின் அருகே வரும் போது நாய் குறுக்கே சென்றதால் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் நிலை தடுமாறிய ஆட்டோ அருகில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News