உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் 2 காவல்துறை அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம்
- தமிழக அரசால் காவல் துறைக்கு மெச்சத் தகுந்த பணிக்காக ‘அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.
- தேவா்சோலை தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் பாபு ஆகியோருக்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் இரு காவல் துறை அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசால் காவல் துறைக்கு மெச்சத் தகுந்த பணிக்காக வழங்கப்படும் 'அண்ணா பதக்கம்' நீலகிரி மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் தேவா்சோலை தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் பாபு ஆகியோருக்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.