உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் 2 காவல்துறை அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம்

Published On 2022-09-15 10:48 GMT   |   Update On 2022-09-15 10:48 GMT
  • தமிழக அரசால் காவல் துறைக்கு மெச்சத் தகுந்த பணிக்காக ‘அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.
  • தேவா்சோலை தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் பாபு ஆகியோருக்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் இரு காவல் துறை அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசால் காவல் துறைக்கு மெச்சத் தகுந்த பணிக்காக வழங்கப்படும் 'அண்ணா பதக்கம்' நீலகிரி மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் தேவா்சோலை தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் பாபு ஆகியோருக்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News