உள்ளூர் செய்திகள்

சிமெண்ட் சாலையை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார்.

ரேஷன்கடை, அங்கன்வாடி கட்டிடப் பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

Published On 2022-08-14 10:06 GMT   |   Update On 2022-08-14 10:06 GMT
  • ஆவிக்கரை ஊராட்சியில் ரேஷன் கடை கட்டிடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் ஆகிய கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • கல்யாணபுரம் ஊராட்சியில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலையை பார்வையிட்டார்.

திருவையாறு:

திருவையாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவிக்கரை மற்றும் கல்யாணபுரம் ஊராட்சி களில் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார். ஆவிக்கரை ஊராட்சியில் ரேஷன் கடை கட்டிடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் ஆகிய கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கல்யாணபுரம் ஊராட்சியில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்வாய்வின் போது திருவையாறு ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ஜான் கென்னடி, நந்தினி பொறியாளர், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உடனிருந்தார்கள்.

Tags:    

Similar News