உள்ளூர் செய்திகள்

பாளையை சேர்ந்த மின்வாரிய ஊழியர் கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது

Published On 2022-07-05 08:59 GMT   |   Update On 2022-07-05 08:59 GMT
  • ஆனந்தபாண்டியை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.
  • தலைமறைவாக இருந்த அருள்ராஜ் என்ற சின்ன அருணா(32) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

நாசரேத்:

பாளை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் ஆனந்த பாண்டி (வயது 51 ).

கொலை

இவர் நாசரேத் அருகே வைத்திலிங்கபுரததில் உள்ள உபமின் நிலையத்தில் லைன் மேன் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று இரவு அலுவலகத்தில் பணியில் இருந்தபோது ஆனந்தபாண்டியை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.

மேலும் ஒருவர் கைது

இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 16 வயது சிறுவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய குணசேகரன் (28), முத்துக்குமார் (20) ஆகியோர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், தலைமறைவாக இருந்த அருள்ராஜ் என்ற சின்ன அருணா(32) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையிலான போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News