உள்ளூர் செய்திகள்
திண்டிவனத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபர்
- காலேஜ் ஈரோடு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடம்பில் பல இடங்களில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
- இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்?கொலை செய்து யாரிடம் வீசி சென்று உள்ளார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காலேஜ் ஈரோடு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடம்பில் பல இடங்களில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்?கொலை செய்து யாரிடம் வீசி சென்று உள்ளார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.