உள்ளூர் செய்திகள்

கடையநல்லூரில் இன்று அதிகாலை டீக்கடையில் தீ விபத்து

Published On 2022-06-15 09:32 GMT   |   Update On 2022-06-15 09:53 GMT
  • டீக்கடையில் இருந்து அதிகமான புகைமூட்டத்துடன் தீ பற்றி எரிந்துள்ளது.
  • விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடையநல்லூர்:

கடையநல்லூர் சட்டமன்ற அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழக்கடை, மரக்கடை, பஞ்சர் கடை, ஓட்டல், டீக்கடை என தொடர்ச்சியாக கடைகள் உள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு டீக்கடையில் இருந்து அதிகமான புகைமூட்டத்துடன் தீ பற்றி எரிந்துள்ளது. இதனைப்பார்த்த பொதுமக்கள் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். துரிதமாக விரைந்து தீயை அணைத்ததால் அருகில் உள்ள மரக்கடை உள்பட மற்ற கடைகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

தீ விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News