உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே குளத்தில் பாய்ந்த லாரி
- கங்கை கொண்டானில் இருந்து இன்று காலை கான்கீரிட் கலவையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அம்பையை நோக்கி சென்றது.
- திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள குளத்தில் கவிழ்ந்தது
நெல்லை:
நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் இருந்து இன்று காலை கான்கீரிட் கலவையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அம்பையை நோக்கி சென்றது. லாரியை கொடியன்குளத்தை சேர்ந்த திவாகர் ஓட்டிச்சென்றார்.
நெல்லையை அடுத்த கோபாலசமுத்திரம் பிராஞ்சேரி அருகே வந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள குளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் மேல்பகுதி தண்ணீரில் மூழ்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.
விபத்துக்குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.