உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்சில் 2 பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகை பறிப்பு

Published On 2022-09-19 08:35 GMT   |   Update On 2022-09-19 08:35 GMT
  • சேலத்தில் ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.
  • பஸ்சில் வரும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், நகையை பறித்துள்ளனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் உடல் நல ஆலோசராக பணியாற்றி வருபவர் தமிழரசி (வயது 45). இவர் இன்று காலை மேட்டூரில் இருந்து ஒரு பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்சில் ஏறிய அவர் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற அவர் தான் அணிந்திருந்த 5 பவுன் நகை மாயமானது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதனால் கதறியஅவர் சம்ப வம் குறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல 60 வயது மூதாட்டி ராணி சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் பஸ்சில் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் அணிந்திருந்த ஒரு பவுன் நகை மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

பஸ்சில் வரும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், நகையை பறித்துள்ளனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News